காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சி பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் விலைக்காட்சி படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வர்த்தகர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர்
தண்டப்பணம் விதிப்பு
இதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் (22-08-2023) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலையானதையடுத்து காலாவதியான முகப்பூச்சு கிறிம் பிஸ்கட் கேக் சோடா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய ஏழு வர்த்தகர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய மற்றும் விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு தலா ஐயாயிரம் வீதம் 30ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.