எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் முடியும் வரை, எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.
கப்பலின் தலைவர் மற்றும் குழுவினருக்கு எதிராக தற்போது குற்றவியல் விசாரணை நடந்து வருகின்றது.
2021, மே 20 வியாழக்கிழமை எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த கப்பல் இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து பயணித்ததுடன் , ஆபத்தான பொருட்களான நைட்ரிக் அமிலம், மெத்தனால், சோடியம் ஹைட்ரொக்சைட் மற்றும் பிற இரசாயனங்கள்) மற்றும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட 1,486 கொள்கலன்களை ஏற்றி வந்தது.
இலங்கை கடற்படை, இந்திய கடலோர காவல்படையினரின் ஆதரவுடன் முயற்சிகளை மேற்கொண்டபோதும் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனையடுத்து கப்பலின் அனைத்து உறுப்பினர்களும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீப்பரவியதால், கொள்கலன் அடுக்குகள் சரிந்து பல கொள்கலன்களும், எரியும் திரவங்களும் குப்பைகளும் கப்பலில் வீழ்ந்தன.
நான்கு கொள்கலன்கள் கரை
ஒதுங்கியிருந்தன, மேலும் பல மூழ்கிவிட்டன.
ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி, 150 கி.மீட்டர் கரையோரம் கப்பலில் இருந்து
வெளியேற்றப்பட்ட குப்பைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.