இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்று(10) ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கடற்றொழிலாளர்கள் மன்றிற்கு அழைத்துவரப்பட்டனர்.
செலுத்த தவறும் பட்சத்தில்
வழக்கினை ஆராய்ந்த நீதவான் நளினி சுபாஸ்கரன் 26 கடற்றொழிலாளர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் இரு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையும் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |