சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Indian fishermen Sri Lanka Sri Lanka Fisherman Law and Order
By Sudaron Apr 22, 2026 10:18 AM GMT
Report

கிளிநொச்சி -  இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 09ஆம் திகதி மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 14 கடற்றொழிலாளர்களுக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடந்த 09ஆம் திகதி 10 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த 14ஆம் திகதி 4 இந்திய கடற்றொழிலாளர்களும் இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணை அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணை அதிரடி - தொடரும் பதற்றம்

இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைகளின் பின்னர் கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வி. கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் து. டிறோசன், செ. சதீஸ்குமார் ஆகியோர் இவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Orders Illegal Fishermen

இதனையடுத்து, குறித்த 14 கடற்றொழிலாளர்களையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

145 கடற்றொழிலாளர்கள் கைது

இந்நிலையில், இன்று (22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 09ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Orders Illegal Fishermen

அதேபோல், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், படகோட்டிக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US