மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்படும் (BYD) வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன பத்திரங்களின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாகனம் வாங்குபவர்களை பாதிக்கும் செயற்பாடு
நீதிமன்றத்தால் முன்னர் வழங்கப்பட்ட உத்தரவுகளின்படி,மனுதாரர் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களை வாகனங்களின் இயந்திர திறனின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வரியை செலுத்திய பிறகு பல சந்தர்ப்பங்களில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருப்பதால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சிரமத்தையும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உத்தரவை வெளியிடுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இலங்கை சுங்க திணைக்களமும் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இருப்பினும், மனுதாரர் நிறுவனம் தனது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் வாகனங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று இலங்கை சுங்கத்துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
குறித்த அனுமதிச்செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்கள் வாகனம் வாங்குபவர்களை மோசமாக பாதிக்கும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.