சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு - செய்திப் பார்வை (Video)
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்காக இவர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,