உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பாக நாளை (04) காரணிகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து, அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் நாளைய தினம் மேலதிக காரணிகளைப் பரிசீலிக்கவுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் CID சமர்ப்பிக்கவுள்ள விளக்கங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணையில் இது மேலும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan