பொரளை தனியார் மருத்துவமனைக்கு எதிரான தடைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
பொரளை தனியார் வைத்தியசாலையொன்றின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு எதிரான உத்தரவை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது
கொழும்பு, தனியார் மருத்துவமனையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07.06.2023) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடைக்கால தடை உத்தரவு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த வைத்தியசாலை மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த மனு தொடர்பான விவகாரங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையடுத்து, மேற்படி தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
