சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Batticaloa Court Hotels Health Medical Officer Public Health Inspector
By Kumar Dec 04, 2021 08:53 AM GMT
Report

இன்று பல இடங்களில் பொது சுகாதார பரிசோதர்களால் உணவகங்கள், சில்லறைக்கடைகள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடுள்ளன.

திருகோணமலை

திருகோணமலை மூதூர் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது சுகாதார பரிசோதர்களால் உணவகங்கள், சில்லறைக்கடைகள் போன்றவற்றில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் ,பலசரக்கு கடைகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் இன்று(4) பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான பாத்திரங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காலவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக பத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இச் சோதனை நடவடிக்கையின் போது மூதூர் பகுதியில் பெரும்பாலான கடைகளின் சுற்றுப்புறங்களில் நுளம்பு பெருகுவதற்கான அதிகமான இடங்கள் அவதானிக்கப்பட்டதுடன், குறித்த இடங்களை நீர் தேங்காமலும் நுளம்பு பெருகாத வண்ணமும் உடனடியாக சுத்தம் செய்து டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் : எப்.முபாரக்

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மூன்று உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதி உட்பட பல இடங்களில் உள்ள உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற தவறிய மூன்று உணவகங்களுக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இரண்டு உணவகளுக்கு தலா 10.000ரூபா, 70.0000 ரூபா தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US