தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!(Photos)
யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டு
விவேகானந்தா தமிழ்ஈசன் மற்றும் போசிந்தா ஆகியோரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
தமிழ்ஈசன் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் சொல்வதோடு
அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.