கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம்
கொழும்பு, பொரளையில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிசர உயன, பேஸ்லைன் வீதி, பொரளை முகவரியை சேர்ந்த இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதி வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்கு
இதன் மூலம் கிடைத்த பணத்தை சந்தேக நபரான பெண்ணின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபரான பெண் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி அத்துருகிரிய பிரதேசத்தில் 6 பேர்ச் காணியையும், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 300 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.
அதற்கமைய, சந்தேகநபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த வீடு மற்றும் காணிக்கு, பணம் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
நேற்று அத்துருகிரிய, ஒருகொட பகுதியில் வைத்து இந்த சந்தேக நபரான தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடையவர் எனவும், ஆண் 37 வயதுடையவர் எனவும், இவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும், இந்த தம்பதியினர் மற்றும் பெண்ணின் தாயார் பெயரிலுள்ள 06 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும், சந்தேக நபரான ஆணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சொகுசு கார் ஒன்று தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam