கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்
தம்பதி கைது
சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வானில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri