வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியில் அரச அதிகாரிகள்
குடியிருக்க வீடுகள் இன்றி வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியொன்று நேற்றிரவு (18) எட்டு மணி தொடக்கம் நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனத்தொகைக் கணக்கெடுப்பு
குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் வீதிகளில் வசிப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் 35 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (19) தொடக்கம் சனத்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை சரிபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri