நிலாவெளி கடலில் குளிக்கச்சென்ற மற்றுமொரு இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளது
திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச த்தில் உள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரராசா சிந்துஜன் (21 வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் மூழ்கி ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டது.
இந்நிலையில் மற்ற இளைஞனுடைய சடலம் தேடப்பட்டு வந்த நிலையில் இவருடைய சடலம் இன்று 13ஆம் தேதி மாலை கரையொதுங்கி உள்ளதாகவும் இவரது சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam