இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி குப்பிகள் அனுப்பப்படவுள்ளதாக அறிவிப்பு
இந்தியாவில் இருந்து சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி குப்பிகள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால உறவின் அடிப்படையிலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாக இலங்கையின் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இதன் ஒருக்கட்டமாகவே இந்தியா 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
எனினும் முன்னதாக இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒக்ஸ்போட் எஸ்ட்ராசெனேகாவின் 6 இலட்சம் தடுப்பூசிக்குப்பிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri