அடுத்த மூன்று நாட்களுக்குள் 31,000 இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
இராணுவ வீரர்கள் 7,500 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்குள் 31, 000 இராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இராணுவ மருத்துவ குழுக்கள் திட்டமிட்டுள்ளன.
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று பாலாலி இராணுவ மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதை அவதானித்தார்.
அதன் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றொரு தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.