நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் பத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட்
இலங்கையின் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் இணைக்கப்பட்ட 10 பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தரப்புகள் இதனை உறுதி செய்துள்ளன.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத்தப்படும், எனினும் நாடாளுமன்ற பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தற்போது கடமைகளுக்கு அழைக்கப்படுவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கடமைகளைச் செய்யும் போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும், சமூக தூரத்தை பராமரிக்கவும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தின் நடவடிக்கை குழு கூடி, தொற்றுநோய் சூழ்நிலை
காரணமாக அமர்வுகள் நடத்தப்படலாமா என்பது குறித்து விவாதிக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.