யாழில் கோவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 99 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
மந்திகை ஆதார மருத்துவமனை கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
