கொழும்பில் கண்டறியப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்கள்
கோவிட் தொற்றை கண்டறிய கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பிந்திய பீசீஆர் சோதனை முடிவுகளின்படி, கொம்பனித்தெருவில் 79 பேரும், மிரிஹனாயில் 71 பேரும், கல்கிசையில் 68 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 828 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 170 பேர் கொழும்பு மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.658 பேர் கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். தெமட்டகொடையில் 20 பேரும், நாரஹன்பிட்ட்டியில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பாதுக்கையில் 88 பேரும், அவிசாவெல்லயில் 78 பேரும், தெஹிவலயில் 52 பேரும், ஹன்வெல்லயில் 33 பேரும், ஹோமாகமயில் 29 பேரும், மொரட்டுவயில் 39 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் இலங்கையில் 3,103 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 828 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கம்பஹாவில் 544
பேரும், குருநாகலில் மாவட்டத்தில் 255 பேரும் உள்ளடங்குகின்றனர்.