குற்றவியல் விசாரணை திணைக்கள நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொரோனா
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் நான்காவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொஸ்கொட தாரக உட்பட 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஏனைய கைதிகளுக்கு நடத்தப்பட்ட PCR சோதனையில் ஒன்பது பேருக்கும் வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் களுத்துறை பொலிஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்திய காரணத்தினால் கொரோனா தொற்றி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.