ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மூன்று விமானிகளுக்கு கொரோனா
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று விமானிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் விமானப் பயணங்களை மேற்கொண்டதன் காரணமாக இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று விமானிகளும் தற்போது புத்தளம் இரணவில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இதுவரை 46 ஆயிரத்து 248 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள்னர்.
இவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7 ஆயிரத்து 6 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா காரணமாக இலங்கையில் 219 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உலகம் முழுவதும் 87,640,097 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 1,890,847 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 63,131,823 பேர் குணமடைந்துள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam