கரைதுறைப்பற்றில் பலருக்கு கோவிட் தொற்று உறுதி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து யாழ்ப்பாணத்துடன் தொடர்புடைய பணியாளர் ஒருவர் வந்து சென்ற காரணத்தினால் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முதற்கட்ட அன்டிஜன் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது எட்டுப்பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.