இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே மெல்பேர்னில் கோவிட் கொத்தணி உருவானது!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பரவி வரும் கோவிட் புதிய கொத்தணி, இலங்கையிலிருந்து அந்நாட்டிற்கு சென்றவரால் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை ஊடாக மெல்பேர்னுக்குச் சென்ற நபர் ஒருவராலேயே இக்கொத்தணி உருவாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார பிரிவிற்கும் அறிவித்துள்ளதாக, வைத்தியசர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.