காலமான பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா உறுதி!
மறைந்த இலங்கையின் பிரபல எழுத்தாளர் - 'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதியாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி தனது 93 ஆவது வயதில் அவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், அவரின் மாதிரி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இன்று வெளியாகிய பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே டொமினிக் ஜீவாவின் உடல் இன்று மாலை பொரளையில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமையத் தகனம் செய்யப்பட்டுள்ளது.