நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான முடிவுகள்:இடையில் நிறுத்தப்பட்ட திட்டங்கள்
நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான முடிவுகளின் அடிப்படையில் சில திட்டங்களை இடையில் நிறுத்த வேண்டியேற்பட்டதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம்(கோபா) தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கு அந்த தீர்மானங்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
10 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்ட 10 ஆண்டுக்கான உரிய பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குமாறு கோபா குழு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு இநத ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ள திட்டங்கள், அனுமதி கிடைத்தும் இடையில் நின்று போன திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலைமை மேம்படுத்த திணைக்களத்திடம் உள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தெரிவுக்குழுவின் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
