வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
ஏற்றுமதி வருவாயை மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியால், அண்மையில் வெளியிடப்பட்ட, ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது தொடர்பாக சில விதிகள், குறிப்பிட்ட தரப்பினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகள், புலம்பெயர் தொழிலாளர்களின் முழுப் பணத்தையும் கட்டாயமாக ரூபாவாக மாற்ற வேண்டும் என்று கூறிவருகின்றன.
எனினும் ஏற்றுமதி வருவாயை ரூபாவாக மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் பிற முறையான மார்க்கங்கள் மூலம் தங்கள் வருவாயை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அத்தகைய நிதியை எந்த வணிக வங்கியிலும் அந்நிய செலாவணியாக வைத்திருக்கலாம்.
அதன்படி, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தாங்கள் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றுவது கட்டாயமில்லை.
எவ்வாறாயினும், அந்த வருமானத்தை ரூபாவாக மாற்ற விரும்புவோருக்கு, பணம் அனுப்பும் ஊக்கத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக 2021 ஜனவரி 31 வரை ஒரு அமெரிக்க டொலருக்கு 10.00 ரூபா செலுத்தப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021