இலங்கையில் உயிருடன் உள்ளவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போஸ்டரினால் சர்ச்சை
வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வாரியபொல பிரதேச சபையினால் அச்சிடப்பட்ட போஸ்டரில் ஏ.ஜே. எம். முஸாமிலின் புகைப்படம் பதிவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளாகிய ராஜா கொல்லூர் கொத்தலாவல பாதுகாப்பு பீட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொல்லூர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். கொல்லூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வடமேல் மாகாணம் முழுவதும் இரங்கல் பதாகை பதிவிட வாரியபொல பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் போது கொல்லூரின் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் ஆளுநரும் கொழும்பு நகரின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸாமிலின் புகைப்படம் பதிவிடப்பட்டமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வாரியபொல பிரதேச சபையின் ஒரு உறுப்பினரேனும் வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லூரின் புகைப்படத்தை பார்த்ததில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.


முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
