யாழ். மாநகர எல்லைக்குள் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை! சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்
யாழில் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் சபைக்கு தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையில் நேற்று(04.09.2025) வியாழக்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் சபை உறுப்பினர்களான தர்ஷானந்த் மற்றும் நிசாந்தன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிக்கு மேலாக தனியார் நிறுவனம் ஒன்றின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று இரவோடு இரவாக நிறுவப்பட்டது.
முறைப்பாடு கையளிக்க தீர்மானம்
குறித்த விளம்பர பதாதை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன.
சபையில் அனுமதி பெறாது இந்த விளம்பரப் பலகை பொருத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களால் மாநகர முதல்வருக்கு தெரியப்படுத்திய நிலையில், மறுநாள் இரவு குறித்த பதாதை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் சபை அமர்வில் குறித்த விடயம் பேசுபொருளாக அமைந்த நிலையில், குறித்த விளம்பர பலகை அமைப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி மற்றும் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் ஆகியோர் சபையில் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, குறித்த விளம்பரப் பலகை அமைப்பதில் ஊழல் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில், அது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு அனுப்பப்படும் என முதல்வர் தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் சார்பாக இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு கையளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



