பௌத்த துறவியின் சர்ச்சைக்குரிய செயல் - கிளர்ந்தெழுந்த மக்கள்
மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்படும் பௌத்த துறவியொருவர் நபரொருவரிடம் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் அதனை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலையில் அந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
குறித்த பௌத்த துறவியின் சர்ச்சைக்குரிய செயல் காரணமாக குறித்த இடத்திலிருந்த மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இதன்போது காணொளியை பதிவு செய்த நபர் மது போதையில் இருந்ததாக கூறப்படும் துறவியை தொடர்ந்து வாகனம் செலுத்தவிடாது தடுத்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மகா சங்க தேரர்களுக்கு கூறுவதாகவும் தெரிவித்து தேரரை எச்சரித்துள்ளார்.