விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான கடத்தல் பொருட்கள்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர்களையும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது கொண்டுவரப்பட்ட பொருட்களில் வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு வகையான சிகரெட்டுகள், கிரீம்கள், வாகன பாகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கத்தரிக்கோல் ஆகியவை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரி - கிளப் வசந்த படுகொலையில் திடுக்கிடும் தகவல்கள்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri