ஸ்பெயினில் தொடர்ந்து வெடித்து சிதறும் எரிமலை!
ஸ்பெயினில் தொடர்ந்து வெடித்து சிதறும் எரிமலை காரணமாக லாவா குழம்பு தொடர்ந்தும் வெளியேறிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பெயினின் லா பல்மா தீவில் சீற்றத்துடன், காணப்பட்ட கும்ரே வீஜா எரிமலை, கடந்த மாதம் 19ம் திகதி வெடிக்கத் தொடங்கி தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகின்றது.
எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறு போல் வழிந்தோடி வருகின்றமையால் மலையடிவாரத்தில் உள்ள 4 கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருகின்மையினால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.