அரசியலமைப்பு பேரவை வழங்கிய பரிந்துரையை நிராகரித்த ரணில்...!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்காக, அரசியலமைப்பு பேரவை வழங்கிய ஒரு பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரான்; ஸ்பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் எஸ். ரனுக்கேவின் பெயரே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பு பேரவை
இது குறித்து அரசியலமைப்பு பேரவையின்; கூட்டத்தின் போது ஒரு நீண்ட விவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அரசியலமைப்பு பேரவை, வழங்கிய பரிந்துரைகளை எவராலும் நிராகரிக்க முடியாது பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக உறுப்பினர்களின் முக்கிய குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக பேரவை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
YOU MAY LIKE THIS VIDEO