மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசல் தற்போது குறைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்துள்ளார்.
நேற்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் விசாக்களை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானங்கள் அவசரமாக தரையிறங்க அனுமதி
மத்திய கிழக்கு நோக்கி செல்லும் விமானங்கள் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினால், கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன.

அதற்கமைய, விமானப்படையின் உதவியை நாடுவதாகவும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விமான நிலையங்கள் மூடப்பட்ட நாடுகளில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விமான நிறுவனம் அல்லது அதன் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு சரியான நிலைமைகளைப் பற்றி அறிந்துகொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இது விமான நிலையத்தில் தேவையற்ற நெரிசலைக் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri