பிரான்சில் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல்
பிரான்ஸ்(France) தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல் உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார்.
அதிக வாக்குகள்
குறித்த தேர்தலில் முதல் சுற்றில் தீவிரக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி முன்னிலை வகுத்த நிலையில், உடனடியாக அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் மற்ற கட்சிகள் இணைந்து தீட்டிய திட்டத்தால், இரண்டாவது சுற்று தேர்தலில் வலதுசாரிக் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.
இதில் இடதுசாரிக் கட்சிகள் மற்ற கட்சிகளைவிட அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றாலும் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆட்சியமைப்பதற்காக இடதுசாரிகள் இணைந்து புதிதாக New Popular Front (NFP) என்னும் கூட்டணியை உருவாக்கினார்கள்.
ஆனால், எந்தக் கட்சியைச் சேர்ந்தவரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கூட்டணிக்கட்சிகளுக்குள் மோதல் உருவாகியுள்ளதோடு, கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்ற கட்சி, மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமையினால் பிரான்ஸ் அரசியலில் ஒரு குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |