மூன்று தேர்தல்களையும் ஒன்றாக நடத்துங்கள்: நவின் திஸாநாயக்க - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய மூன்றையும் ஒன்றாகவே நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தனது தனிப்பட்ட ஆலோசனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இலிருந்து 4000 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்த நவின் திஸாநாயக்க, அந்த தீர்மானத்தின் மூலம் பெருமளவு பணத்தை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,