தமிழினம் பெரும் பலத்தினை இழந்துள்ளது : இரங்கல் வெளியிட்ட முக்கியஸ்தர்கள்
புதிய இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி செயற்பட்டவரும், இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்கான அயராது உழைத்து வந்தவருமான மாண்புமிகு இரா சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்தகவலையும் அடைகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் க.ச.குகதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பிரிவால் வாடும் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனான இரா. சம்பந்தனை (R. Sampanthan) நாம் இழந்துள்ளோம் என இந்துக் குருமார் அமைப்பு தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலுமு். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்ட ஒருவர் சம்பந்தன்.
இறை பிரார்த்தனை
இவர் எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர்.
நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம்.
இச்சமயத்தில் அமரரது ஆத்ம சாந்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் செய்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - கஜிந்தன், தாஸ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri