தமிழர்களுக்காக குரல்கொடுத்த சிங்களவரின் மறைவு: புளொட் கழகம் அஞ்சலி
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, இடதுசாரித் தலைவர் தோழர் விக்ரமபாகு கருணாரத்னவிற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
"நவ சமசமாஜ கட்சியின் தலைவராக தனது 81ஆம் வயதில் காலமான அவர், தமிழ் மக்களது சுய நிர்ணய அடிப்படையிலான ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் குரல் கொடுத்து வந்த ஒருவர்.
எங்களுடைய செயலதிபர் உமாமகேஸ்வரனுடனும் பின்னர் என்னுடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அவர், தனது இறுதிக் காலம் வரையிலும் அவ் உறவுகளை பேணி வந்தார்.
அடிப்படை உரிமை
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக உள்நாட்டிலும் நாட்டிற்கு வெளியிலும் மிக தீவிரமாக குரல் கொடுத்து வந்தார்.
தமிழ்மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் எனும் பட்டியலில் அமரர் தோழர் விக்ரமபாகு கருணாரத்னவிற்கு என்றென்றும் தனித்துவமான இடம் இருக்கும்.
இவருடைய இழப்பு இலங்கையில் இருக்கும் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல தங்களின் அடிப்படை உரிமையை கோரி நின்று போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
