இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 12 கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள், எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்களும் நேற்று(08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை, இந்திய கடற்றொழிலாளர்களை கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர் News Lankasri