வெலிக்கடை சிறைச்சாலையில் கோவிட் கொத்தணி ஏற்படும் நிலை
வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு தினங்களில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட அனைவரும் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு நீதிமன்றங்கள் மற்றும் ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் அழைத்து வரப்படும் நிலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பிரதேசங்களில் இருந்தும் நபர்கள் தொடர்ந்தும் வருவதாகவும், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கோவிட் வைரஸ் பரவுவது வேகம் எடுத்துள்ளது எனவும் வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஆர்.பீ.கே.சந்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறைச்சாலையில் கோவிட் கொத்தணி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அத்துடன் மக்கள் கோவிட் ஆபத்தை மறந்து, சுகாதார பழக்கத்தை மறந்த இருப்பதாகவும், இது அந்தளவுக்கு நல்ல நிலைமை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.