கணனி மின்னேற்றி வெடித்து மாணவன் பலி
காலி பலப்பிட்டிய படபொல கொபேய்துடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றி வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திகெட்டிய பென்வல வீதி பகுதியை சேர்ந்த 14 வயதான டப்ளியூ.ஏ. செனத் இந்துவர என்ற இந்த பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றியை இயங்க செய்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணனியை மடியில் வைத்திருந்த மாணவன்

மின்னேற்றி வெடித்த போது மாணவன் கணனியை மடியி வைத்துக்கொண்டிருந்தாகவும் அப்போது மின்னேற்றி மின் இணைப்பில் சொருகப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மின்னேற்றி வெடித்ததால் மாணவனை மின்சாரம் தாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.