கணனி மின்னேற்றி வெடித்து மாணவன் பலி
காலி பலப்பிட்டிய படபொல கொபேய்துடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றி வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திகெட்டிய பென்வல வீதி பகுதியை சேர்ந்த 14 வயதான டப்ளியூ.ஏ. செனத் இந்துவர என்ற இந்த பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றியை இயங்க செய்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணனியை மடியில் வைத்திருந்த மாணவன்
மின்னேற்றி வெடித்த போது மாணவன் கணனியை மடியி வைத்துக்கொண்டிருந்தாகவும் அப்போது மின்னேற்றி மின் இணைப்பில் சொருகப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மின்னேற்றி வெடித்ததால் மாணவனை மின்சாரம் தாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
