முல்லைத்தீவில் விஷமிகளால் வயல்வெளிக்கு தீமூட்டப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு (photos)
முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியில் வயல்வெளி விஷமிகளால் தீமூட்டி சேதமாக்கப்பட்டுள்ளதாக செம்மலை பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று (16.02.2023) பதிவாகியுள்ளது.
ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியரான வேலுப்பிள்ளை இரத்தினசபாபதி என்பவருடைய வயல் நிலமே தீமூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விஷமத்தனமாக செயற்பாடு
அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறான விஷமத்தனமாக செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
பொதுவேலைத்திட்டங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் இவ்வாறாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், 10 வருடங்களாக குறித்த நிலத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இப்படியான விசமத்தனமான நடவடிக்கைகள் இதுவரை நடைபெற்றதில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
