ஈழத்துச் சிதம்பர ஆலய நம்பிக்கை பொறுப்பாளரின் வீட்டை எரிப்பதற்கு முயன்றதாக முறைப்பாடு
காரைநகர் - ஈழத்துச் சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தினை நடாத்துமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனது வீட்டை எரிப்பதற்கு முயன்றதாகத் தெரிவித்து அந்த ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தில் பாலஸ்தானம் செய்து திருவெம்பாவை நிகழ்வை நடத்தாமல் இருப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பாலஸ்தானம் செய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
திருவெம்பாவை நிகழ்வு
இந்நிலையில், ஆலயத்தின் திருவெம்பாவை நிகழ்வை கொரோனா காலத்தில் முன்னெடுத்தது போல 2022ஆம் ஆண்டும் முன்னெடுப்பது என ஆலய நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
மேலும், திருவெம்பாவை உற்சவத்திற்குப் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகள் பலர் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்னும் பலர் இலங்கைக்கு வருவதற்கும் திட்டமிட்டு விமான பயணச் சீட்டுக்களுக்குப் பதிவு செய்திருந்தனர்.
அந்தவகையில் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கடந்த 18.12.2022 அன்று ஆலயத்தினை நோக்கி அறவழிப் போராட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தின் முடிவில் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரிடம் மகஜரை கையளிக்க முற்பட்டவேளை அவர் வீட்டில் இல்லை என அவரது உறவினர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆலயத்தின் வாயிலில் மகஜரை
வைத்துவிட்டு போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்.
அதன்பின்னர் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்
13 பேர் தனது வீட்டினை எரிப்பதற்கு முயன்றதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு
இருப்பினும் பொலிஸார் குறித்த பேரணியில் தங்களது கடமையில் தாமும் இருந்ததாகவும் அந்த நேரத்தில் அவ்வாறு எரிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என கூறி விசாரணையை நடாத்துவதற்கு முன்வரவில்லை.
இந்நிலையில், ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் இது குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அந்தவகையில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை வழங்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று
வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரது
பிரசன்னம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
