மாநகர சபை உறுப்பினருக்கு அவதூறுப் புகைப்படம் அனுப்பிய நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..!
மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் தயாளகுமார் கௌரிக்கு, வாட்ஸ்ஆப் சமூக ஊடகம் ஊடாக தவறான புகைப்படங்களை அனுப்பி அவதூறு விளைவிக்க முயன்ற நபருக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(03.06.2026) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
குறித்த முறைப்பாட்டில், சமூகத்தில் மக்கள் பிரதிநிதியாகவும், ஒரு பொதுச் செயற்பாட்டாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் தனக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனில், சமூகத்தில் வாழும் சாதாரண பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என அவர் தனது முறைப்பாட்டில் மிகவும் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டப்படியான கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள கொக்குவில் பொலிஸார், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri