அசோக் அபேசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு ஊடகமொன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் தேவைக்காக மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அசோக் அபேசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும், இது குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri