அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!
அம்பாறை மாவட்டத்தில், கடந்த வெள்ள அனர்த்ததினால் வீடுகள் மற்றும் தொழில் ரீதியாக பாரியளவில் பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஆசீக் தலைமையில் நேற்று(16) மாலை நடைபெற்றது.
இழப்பீடு
இந்நிகழ்வில் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக கிராம உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








