கனேடிய நீதிமன்றின் உத்தரவை அவமதித்த X நிறுவனம்
அனுமதி அளிக்கப்படாத அந்தரங்கப் புகைப்படமொன்றை உலக அளவில் நீக்காமல், கனடாவில் மட்டும் எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளது.
இது, கொலம்பியாவின் சிவில் நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு எதிரான நடவடிக்கையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் மாற்றுப்பாலினத்தவர் ஒருவர், தனது அந்தரங்கப் படம் ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடகமான எக்ஸ் இல் வெளியிடப்பட்டதாக முறைப்பாடு அளித்தார்.
உத்தரவு
இந்தச் சட்டவிரோதப் படத்தை எக்ஸ் தளத்திலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், எக்ஸ் நிறுவனம், அந்தப் படத்தை கனடாவில் மட்டும் பார்க்க முடியாதபடி தடுத்தது. ஆனால், உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருந்து அதைப் பார்க்க அனுமதித்தது.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவு "உலகம் முழுவதும்" அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று கூறியது. கனடாவில் மட்டும் தடுப்பது என்பது முழுமையான பாதுகாப்பு அல்ல என்று கூறி, நீதிமன்றம் எக்ஸ் நிறுவனத்துக்கு 100,000 டொலர் அபராதம் விதித்தது.
வழக்குப் பதிவு
உலகளவில் ஒரு படத்தை நீக்க உத்தரவிடுவது, மற்ற நாடுகளின் சட்ட அதிகாரத்தை மீறுவதாகும் என்றும், இது உலகெங்கிலும் உள்ள பேச்சுரிமைக்கு அச்சுறுத்தல் என்றும் எக்ஸ் நிறுவனம் கூறி, அபராதத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டமா அதிபர் நிகி ஷர்மா, "பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்க, இந்தப் படம் விதிவிலக்கு இல்லாமல் நீக்கப்பட வேண்டும்.
கனடாவில் மட்டும் தடுப்பது போதாது," என்று கூறி, எக்ஸ் நிறுவனத்தின் சவாலை எதிர்த்து வழக்கில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 48 நிமிடங்கள் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam