200வது செயற்பாட்டுக்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய கண்காணிப்புக்குழு
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு ( (COG), இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக கொழும்பிற்கு வந்துள்ளது.
இது, பொதுநலவாய அமைப்பின 200வது தேர்தல் கண்காணிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, முழு செயல்முறையையும் கண்காணிப்பதற்காகவே பொதுநலவாய பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட 15 பேரைக்கொண்ட கண்காணிப்புக் குழு இலங்கை வந்துள்ளது.
தமது இடைக்கால அறிக்கை
சீசெல்ஸின் முன்னாள் ஜனாதிபதி HE Danny Faure, இந்தக்குழுவுக்கு தலைமை ஏற்றுள்ளார்.
இந்தநிலையில், பொதுநலவாய அமைப்பின் 200 ஆவது தேர்தல் கண்காணிப்பு மைல்கல்லைக் குறிக்க இலங்கைக்கு வந்திருப்பதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கண்காணிப்புக்குழு, ஏற்கனவே பல தரப்பினரையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது.
குறித்த கண்காணிப்புக்குழுவினர், தேர்தல் நாளில் வாக்களிப்பு, நிறைவு, எண்ணுதல் செயல்முறைகளைக் கண்காணிப்பார்கள் அத்துடன் செப்டம்பர் 23 அன்று, தமது இடைக்கால அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam