200வது செயற்பாட்டுக்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய கண்காணிப்புக்குழு
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு ( (COG), இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக கொழும்பிற்கு வந்துள்ளது.
இது, பொதுநலவாய அமைப்பின 200வது தேர்தல் கண்காணிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, முழு செயல்முறையையும் கண்காணிப்பதற்காகவே பொதுநலவாய பொதுச்செயலாளரால் அமைக்கப்பட்ட 15 பேரைக்கொண்ட கண்காணிப்புக் குழு இலங்கை வந்துள்ளது.
தமது இடைக்கால அறிக்கை
சீசெல்ஸின் முன்னாள் ஜனாதிபதி HE Danny Faure, இந்தக்குழுவுக்கு தலைமை ஏற்றுள்ளார்.
இந்தநிலையில், பொதுநலவாய அமைப்பின் 200 ஆவது தேர்தல் கண்காணிப்பு மைல்கல்லைக் குறிக்க இலங்கைக்கு வந்திருப்பதில் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கண்காணிப்புக்குழு, ஏற்கனவே பல தரப்பினரையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது.
குறித்த கண்காணிப்புக்குழுவினர், தேர்தல் நாளில் வாக்களிப்பு, நிறைவு, எண்ணுதல் செயல்முறைகளைக் கண்காணிப்பார்கள் அத்துடன் செப்டம்பர் 23 அன்று, தமது இடைக்கால அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri