பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்! மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
உலகத்தின் நிலைமைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. நிலக்கரியின் விலையை கட்டுப்படுத்த முடியாது. எரிபொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. உலகில் இருக்கின்ற பொருட்களின் விலைகளையும் நாம் கட்டுப்படுத்த முடியாது என என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எனவே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலைமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறிப்பிடத்தக்க அளவில் ஒரு நெருக்கடி மிக்க கஷ்டமான காலமாக இருக்கின்றது. முழு உலகமும் இந்த நிலைமையை எதிர்கொண்டு இருக்கிறது.
எனவே சகலரும் தமது கடமையை சரியான முறையில் முன்னெடுப்பது முக்கியமானது. ஏற்றுமதியாளர்கள் தாம் பெற்றுக் கொள்கின்ற டொலர்களை உடனடியாக இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
இறக்குமதியாளர்கள் அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்யாமல் தேவையான அளவு இறக்குமதி செய்வது நன்றாக இருக்கும்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர வேண்டும். எமது கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
