நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க குழு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (06.07.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது சம்பவம் தொடர்பான விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க
அதன் பிரகாரம், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக, குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொகான் வீரக்கோன் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரித்து, தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 7 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri