திருகோணமலை கடற்படை தளத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி
திருகோணமலை கடற்படை தளத்தில் இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி நேற்று ஆரம்பமான நிலையில் மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.
பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அமைப்பில் நடைபெறும் அதேவேளை, அதன் கடல் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 26 முதல் 30 வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
கடல்சார் ஈடுபாடு மற்றும் இயங்குதளத்தை மேம்படுத்துதல், பகிரப்பட்ட கடல்சார் சவால்களில் மேலும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, செயல்பாட்டுச் சூழல், விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வது, கடல்சார் கூறுகள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகளை எளிதாக்குதல், கடல்சார் பரஸ்பர திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப செயல்படுதல் என்பன பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் எனக் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமம் மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை, இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கிடையில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் விமான போக்குவரத்து, கடலில் நிரப்புதல், மேற்பரப்பு டிராக்கெக்ஸ், வருகை வாரிய தேடல் மற்றும் பறிமுதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சி வாய்ப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபாஹு, ஆகிய கப்பல்களும், இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக ஹெலிகொப்டர்கள், B 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்குச் சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல், பி-8 பொசிடன் போயிங் கடல் சார் ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் ஆகியவற்றுடன் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பல் மற்றும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டர் ஆகியன பங்கெடுக்கின்றதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை என் ஜயரட்ண, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டெர் உட்பட உயர் அதிகாரிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
